Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொழிலாளி வெட்டி படுகொலை….. உறவினர்களின் வெறிச்செயல்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள எல்லப்பாளையம் தொட்டம்பட்டி பகுதியில் மீன் பிடி தொழிலாளியான கணேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நதியா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நில தகராறு காரணமாக கணேசனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் உறவினர் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் கணேசன் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 உறவினர்கள் நிலத்தகராறு தொடர்பாக கணேசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென தங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். பின்னர் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கணேசன் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அந்த மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |