Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொழிலாளி வீட்டிற்குள் நுழைந்து….. கூட்டாளியுடன் அட்டூழியம் செய்த ரவுடி…. பரபரப்பு சம்பவம்….!!!

தொழிலாளியை தாக்கி ரவுடி தனது கூட்டாளியுடன் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று முன் தினம் மோகன்ராஜ் வீட்டில் இருந்தபோது ரவுடியான பிரகாஷ் என்பவர் அவரது கூட்டாளியுடன் சென்று மோகன்ராஜிடம் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து பிரகாஷும், அவரது கூட்டாளியும் இணைந்து மோகன்ராஜிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர்.

இதனை தடுத்த மோகன்ராஜை அவர்கள் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கட்டையால் தாக்கி 3 ஆயிரத்து 100 ரூபாய் பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த மோகன் ராஜ் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் பிரகாஷையும், அவரது கூட்டாளியையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |