நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அதனால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.5000 இவ்வாறு நாம் வழங்கப்படும் என்று ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி சிறு கடைக்காரர்கள், கட்டுமான தொழிலாளர்கள்,ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட 12 லட்சம் பேருக்கு தலா 5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.