தூத்துக்குடி மாவட்டம் தொழிலாளர் நலத்துறை இணையதளத்தில் வெளிமாநிலங்களில் இருந்து பணிபுரியும் தொழிலாளர்களின் விவரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது “தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து விதமான கடைகளும் வணிக வளாகங்களும் உணவு நிறுவனங்களும் பீடி நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளது.
இந்த நிறுவனங்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். அந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனத்தின் உரிமையாளர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை எந்தவித குறைவும் இன்றி தொழிலாளர் துறை இணையதளமான என்ற முகவரியில் புதிய ஐடியை உருவாக்கி அதன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் புலம் பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களின் விவரங்களை சரியாக பதிவேற்றம் செய்யாமல் அவர்களை வேலைக்கு அமர்த்தியது ஆய்வில் தெரிய வந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு பதிவேற்றம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர்களிடமோ அல்லது துணை தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என்று அவர் கூறியுள்ளார்.