Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தொழிலதிபருக்கு வந்த சோதனை…. கணவன்-மனைவியின் விபரீத முடிவு…. சென்னையில் பரபரப்பு….!!

கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த கணவன்-மனைவி இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பகுதியில் சதீஷ்குமார்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலதிபரான இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சதீஷ்குமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடல் தொல்லையால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் மனமுடைந்த கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இவருக்கும் மாம்பலம் ரெயில் நிலையம் 4-வது நடைமேடை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது எழும்பூரில் இருந்து மதுரையை நோக்கி சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் சதீஷ்குமார் மற்றும் சசிகலா மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |