Categories
மாநில செய்திகள்

தொழிற்கல்வி படிப்புகளில்…. அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை – உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது.

இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.  இதனைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வழி மாணவர் சேர்க்கைக்கு  அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆராய ஆணையம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். ஆணையம் தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசிடம் சமர்பிக்கும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |