இளவரசர் ஹரி ஓப்ரா வின்ஃப்ரே உடனான பேட்டிக்கு பிறகு தனது நண்பர்கள் வட்டத்திலிருந்து தனித்துவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .
இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர் ஓப்ராவுடனான பேட்டியில் அரச குடும்பத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பிரிட்டன் மக்களிடையே அவர்களின் மதிப்பும் குறைந்தது.இந்த கடினமான சூழ்நிலையில் ஹரியின் நெருங்கிய நண்பர்களும் பலர் மௌனம் சாதிப்பதால் ஹரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் மேகனின் நண்பர்கள் அவர் உண்மையை பேசியதாக கூறி அவரைப் பாராட்டி உள்ளனர்.பிரபலம் ஒருவர் கூறுகையில் ,இந்த இக்கட்டான சூழ்நிலையில் இளவரசர் ஹரி மட்டும் ஆதரவின்றி தனித்து இருப்பது திடுக்கிட வைப்பதாக கூறியுள்ளார். அரசு குடும்பத்தில் மேகன் இணைந்த பிறகு எவ்வாறு தனித்துவிடப்பட்டாரோ அதே போன்று தற்போது ஹரியும் கலிபோர்னியாவில் இருப்பதாக இருவருக்கும் நெருக்கமான சிலர் கூறியுள்ளனர்.