Categories
தேசிய செய்திகள்

தொப்பி போட்டது ஒரு குத்தமா….? இஸ்லாமிய மாணவர்களை அடித்து உதைத்த இளைஞர்கள்… போலீஸ் அதிரடி..!!!

தனியார் பயிற்சி மையத்திற்கு தொப்பி அணிந்து வந்த மாணவர் ஒருவரை தாக்கிய பத்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாகல்கோட்டில் கடந்த திங்கள்கிழமையன்று தனியார் பயிற்சி மையத்திற்கு வந்த இஸ்லாமிய மாணவர் ஒருவர் தொப்பி அணிந்து வந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த சில மாணவர்கள் அவரை தொப்பியை கழற்றுமாறு மிரட்டி அடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே தாக்கப்பட்ட மாணவர் இக்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இக்பால் போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் மீது மத வெறியுடன் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் மாணவர்களை துன்புறுத்தும் மற்றும் சமூக ஊடகங்களில் மத சார்பற்ற முறையில் படங்கள் மற்றும் பதிவுகளை பரப்பியவர்களும் அடங்கும். இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என்றும் பாகல்கோட் எஸ்பி லோகேஷ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |