தொட்டிலில் இருந்து தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பன்னிமடை கடைவீதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்களும், 1 மகனும் இருந்துள்ளனர். இவர்களது 2-வது மகள் ஸ்ரீமதி என்பவர் அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீமதி தொட்டிலில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துவிட்டார்.
இதனால் தலையில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஸ்ரீமதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.