Categories
மாநில செய்திகள்

தொடர் மழை எதிரொலி….. சுருளி அருவியில் குளிப்பதற்கு தடை….. ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள்….!!!!

தொடர் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி சிறந்த சுற்றுலா இடமாகவும், புண்ணிய தளமாகவும் உள்ளது. மேலும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் இந்த அருவி அமைந்திருப்பது தான் கூடுதல் சிறப்பு. ஹைவிவேஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் ஏரியிலிருந்து அறிவிக்கு நீர்வரத்து ஏற்படும். தூவானம் ஏறியிலிருந்து திறக்கப்படும் தண்ணீரும் மலைப்பகுதியில் பெய்கிற மழை நீரும் சேர்ந்து சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக மூலிகைச் செடிகளில் கலந்து சுருளி அருவியாக கொட்டுகிறது.

இந்த அறிவியல் குளித்தால் நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். இதனால் தேனி மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயணிகள் இங்கு வந்து செல்கின்றன. இந்நிலையில் தற்போது ஹைவிவேஸ் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன. அருவியிலும் நீர் வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு அருகில் குளிப்பதற்கு தடைவிதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இதனால் அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Categories

Tech |