கடுமையான வெள்ள பாதிப்பின் காரணமாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக பலுச்சிஸ்தான், கைபர், சிந்த் ஆகிய மாகாணங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ள நீர் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக 937 பேர் உயிரிழந்துள்ளதனர். இதன் காரணமாக தேசிய அவசர நிலை பிரகடனத்தை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகளை தீவிரப் படுத்துவதற்காகவும் பொது மக்களை வெள்ள நீரில் இருந்து பாதுகாப்பதற்காகவும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.