Categories
உலக செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. 102 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கனமழையின் காரணமாக பல்வேறு ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வங்காளதேசத்தில் உள்ள வடகிழக்கு பகுதிகளில் கடந்த 1 வார காலமாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கடந்த 122 வருடங்களில் இல்லாத அளவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது.

இதனையடுத்து சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த மழையின் காரணமாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 102 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், மக்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |