வால்பாறை பகுதியில் கடந்த 15 தினங்களாக தொடர் கன மழை பெய்து வருகின்றது. இதனால் ஆறுகள் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள நீரோடிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சோலையார் அணை நிரம்பி கடந்த 28 தினங்களாக தனது முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் காணப்படுகின்றது. இந்த சூழலில் வால்பாறை பகுதி முழுவதும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழையாக பெய்து வருகின்றது. இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக வால்பாறை பகுதியில் இருக்கும் அனைத்து பள்ளிகூடங்களுக்கும் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பெயரில் விடுமுறை வழங்கப்பட்டது.
இதற்கிடையே கனமழை காரணமாக சோலையாறு அணைக்கு வினாடிக்கு வினா தண்ணீர் வரத்து அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் சோலையாறு அணை ஏற்கனவே முழு கொள்ளளவான 160 அடியை எட்டியது. இந்த நிலையில் தொடர்ந்து தண்ணீர் வரத்து இருக்கிறது. அதனால் அணையின் பாதுகாப்பு கருதி கடந்த இரண்டாம் தேதி அதிகாலை முதல் அணையின் மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் வால்பாறையில் மழை குறையவில்லை மேல்நீரார், கீழ்நீரார், அணை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் மதகுகள் அடைக்கப்படவில்லை.
மேலும் கேரளாவிற்கு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மணிக்கு 1700 கன அடி உபரி நீர் சென்று கொண்டிருக்கிறது. சோலையார் அணைக்கு வினாடிக்கு 6438 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மின் நிலையம் இயக்கப்பட்டு சேடல் பாதை வழியாகவும் பரம்பிக்குளம் அணிக்கு 3 ஆயிரத்து 569 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. மேல் நீரார் அணையிலிருந்து 2052 கன அடி தண்ணீரும் கீழ்நீரார் அணையில் இருந்து 541 கண அடி தண்ணீரும் சோலையார் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதேபோல வால்பாறையில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை கேரளா மற்றும் தமிழக சுற்றுலாப் பயணிகள் ரசித்தபடி செல்கிறார்கள். மேலும் சோலையார் அணைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. வால்பாறையை பொறுத்தவரை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பெரும்பாலான நாட்களில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கதாகும்.