மணல் கடத்திய நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள மழவராயநல்லூர் தெற்குத் தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அறிந்த விக்ரமங்கலம் காவல்துறையினர் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்பின் சில வருடங்களாக தலைமறைவாக இருந்த ரமேஷை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் ரமேஷ் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து கலெக்டரின் உத்தரவின்படி ரமேஷை காவல்துறையினர் கைது செய்து மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.