நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முககவசம் அணிவது கட்டாயம் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் அனைத்துவிதமான கட்டுப்பாடுகளையும் தளர்த்திக் கொள்ளலாம் என மத்திய அரசு பரிந்துரைத்தது. அதேசமயம் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனிடையே நாடு முழுவதும் சில மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தலைநகர் டெல்லியில் பாதிப்பு அதிகரித்து வருவதால் நான்காவது அலை வீசக்கூடும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தொற்று அதிகரித்து வருவதால் முககவசம் அணிய வேண்டும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாஸ்க் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் விதிக்கவும் டெல்லி அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.