உக்ரைன் மீது ரஷ்யபடைகள் சென்ற பிப்ரவரி மாதம் தாக்குதலை துவங்கியது. இப்போது வரை தொடர்ந்து வரும் இத்தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமானது பதிலடி கொடுத்து வருகிறது. இப்போரால் உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி இருக்கின்றனர். இருதரப்பிலும் மிகப் பெரிய் அளவில் உயிர்சேதமும் ஏற்பட்டு உள்ளது. உக்ரைன் மீது தொடர் தாக்குதல்களை நடத்திவரும் ரஷ்ய ராணுவம், அந்நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி வருகிறது. இப்போது கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனிய பகுதிகளில் கடுமையான போர் நடந்து வருகிறது.
அங்கு உள்ள கார்கிவ் நகரில் சென்ற திங்கள்கிழமை நடைபெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் 6 பேர் காயமடைந்தனர். அதன்பின் நேற்று மீண்டும் கார்கிவ் நகரின் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ரஷ்ய படைகளின் தாக்குதலால் அங்கு உள்ள குடியிருப்பு பகுதிகளில் தீ பரவத் துவங்கியது. இந்த தாக்குதல்களுக்கு உக்ரைனிய படைகள் தொடர்ந்து பதிலடிகொடுத்து வருகிறது.