எல்லை வரையறுக்கப்படாததால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகள் சோவியத் யூனியனில் அங்கமாக இருந்தது. அதன் பின் சோவியத் யூனியன் பிளவுபட்டபோது கிர்கிஸ்தான் மற்றும் கஜிகிஸ்தான் நாடுகளும் பிரிந்தன. அவ்வாறு இரு நாடுகளும் பிரியும்போது சுமார் ஒரு ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை இரு நாடுகளும் எல்லைகளாக பகிர்கின்றன. ஆனால் எல்லை முழுவதுமாக வரையறுக்கப்படாததால் இந்த இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை நிலவி வருகின்றது.
இந்தப் பிரச்சனைதான் இரு நாட்டின் ராணுவத்திற்கும் இடையே பெரும் மோதலுக்கு வழி வகுக்கின்றது. இந்த நிலையில் கிர்கிஸ்தானுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் கிர்கிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள 2 கிராமங்கள் மீது தஜிகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் தஜிகிஸ்தானின் ஏழு கிராமங்கள் மீது கிர்கிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த மோதலால் கிர்கிஸ்தான் தரப்பில் 24 பேரும் தஜிகிஸ்தான் தரப்பில் 3 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.