Categories
தேசிய செய்திகள்

தொடங்கியது புரட்டாசி….. திருப்பதியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்….!!!!

புரட்டாசி மாதம் பிறப்பையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

புரட்டாசி மாதத்தில் ஏழுமலையாணை தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று பலரும் கூறுவது உண்டு. ஏழுமலையானின் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்பார்கள். தமிழகத்தை சேர்ந்த ஏழுமலையான் பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது சாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள். பெரும்பாலானர் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாக திருப்பதிக்கு வருகின்றனர். மேலும் வரும் 27ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

ஏழுமலையானுக்கு உகந்த மூன்றாம் சனிக்கிழமை அன்று இந்த ஆண்டு தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் மாட வீதிகளில் உலா வந்து மக்களுக்கு காட்சி தர உள்ளார். ஏற்கனவே கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகின்றது. இன்று புரட்டாசி மாதம் முதல் நாள் என்பதால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் ஏராளமான சாமி தரிசனம் செய்தனர். வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். இலவச தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட தூரம் வரிசையில் 30 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர்.

Categories

Tech |