Categories
தேசிய செய்திகள்

தொடங்கப் போகும் மைசூரு தசரா விழா… கலைகட்டும் மைசூர்… ஆனால் ஒரு கண்டிஷன்… வெளியான அறிவிப்பு…!!!

மைசூரு தசரா விழாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க குறிப்பிட்ட அளவிலான மக்களை மட்டுமே அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

உலகில் மிகவும் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா வருகிற 14-ஆம் தேதி தொடங்க உள்ளது. அந்த விழாவையொட்டி முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரிகள் அஸ்வத் நாராயணன், கோவிந்த் கார்ஜோல்ஆகியோருக்கு மைசூர் மாவட்ட பொறுப்பு மந்திரியும் சோமசேகர் தலைமையிலான தசரா குழுவினர் நேற்று நேரில் சென்று அனைவருக்கும் அழைப்பு கொடுத்து, தசரா விழாவில் பங்கேற்க வரும்படி வரவேற்றனர். அதன்பிறகு சோமசேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “உயர்மட்ட குழு கூட்டத்தில் மைசூரு தசரா விழாவை தொடங்கி வைப்பதற்காக கருணா முன் களப்பணியாளர்கள் ஆறு பேரை தேர்ந்தெடுத்து வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்பின் ஒருவரை வைத்து தசரா விழாவை தொடங்கி வைக்கலாம் என்றும் 5 பேரை விழாவில் கௌரவிக்கலாம் என்றும் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. தசரா விழாவை தொடங்கி வைப்பதற்கு டாக்டர் மஞ்சுநாத் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தாக முதல்-மந்திரி என்னிடம் கூறியதை நான் மைசூரில் அதிகாரபூர்வமாக அறிவிப்பேன். அவரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளேன். தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் இந்த விழாவை எளிமையாக கொண்டாடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் சாமுண்டி மலையில் நடைபெற உள்ள தசரா தொடக்க விழாவில் 200 பேரும், அரண்மனையில் நடைபெற உள்ள கலாச்சார நிகழ்ச்சிகளில் 50 பேரும், ஜம்பு சவாரி ஊர்வலத்தில் 300 பேரும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும்”என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |