Categories
உலக செய்திகள்

தொடங்கப்பட்ட அகழாய்வு பணிகள்…. கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள்…. பாகிஸ்தானில் அறிய கண்டுபிடிப்பு….!!

கைபர் பக்துன்கவா மாநிலத்தில் அகழாய்வு பணிகள் நடத்தப்படத்தில் பௌத்தக் சமயத்தை சேர்ந்த கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் கைபர் பக்துன்கவா மாநிலத்தில் 1,800 ஆண்டுகள் பழமையான பௌத்தக் கலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த மாநிலத்தின் தொல்லியல் துறை இயக்குனர் சம்பத் கூறியதாவது, “கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாபு தேரி கிராம பகுதியில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த அகழாய்வில் 400க்கும் மேற்பட்ட பௌத்தக் சமயத்தை சேர்ந்த கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றினை பராமரிப்பதற்காக தற்போது அதிகாரப்பூர்வ பணிகள் தொடங்கியுள்ளன. அந்த இடங்களை சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

கைபர் பக்துன்கவா மாநிலத்தில் பல்வேறு தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பௌத்த சமயத்தை சேர்ந்த 2,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வழிபாட்டுத்தலம் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவே பாகிஸ்தானின் பழமைவாய்ந்த பௌத்த வழிபாட்டு தலமாக கூறப்படுகிறது.

Categories

Tech |