Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தை அமாவாசை…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்….!!

தை அமாவாசையை முன்னிட்டு மலையேறி சென்று  சுந்தரமகாலிங்க சுவாமியை  பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம்  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமிகளில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களை  கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து சுவாமியை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள்  காலை 7 மணி அளவில் கேட் திறக்கப்பட்ட பிறகு   கோவிலுக்குள் சென்றனர். இதில் பல்வேறு  மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமியை  தரிசனம் செய்துள்ளனர். இங்கு  25 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |