தைவான்உடனான பதற்றத்திற்கு இடையில் சீனநாடானது ஏவுகணை இடை மறிப்பு சோதனையினை வெற்றிகரமாக நடத்திவிட்டது. சீனாவிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவாகிய தைவானை தன் நாட்டின் ஒருபகுதி என கூறி சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதேபோன்று தென்சீனக் கடலிலுள்ள பல தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. சீன நாட்டின் இதுபோன்ற பிராந்திய உரிமை கோரல்களை அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளானது கடுமையாக எதிர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக தைவான் விவகாரத்தில் சீனநாட்டை, அமெரிக்காவானது நேரடியாகவே எதிர்த்து வருகிறது. இதனிடையில் தேவையிருப்பின் தைவானை ஆக்கிரமிப்பதற்கு படைப்பலத்தை பயன்படுத்துவதற்கு தயங்க மாட்டோம் என்று சீனநாடானது மிரட்டிவருகிறது.
இந்த சூழ்நிலையில் தைவான் தன்னை தற்காத்துக்கொள்ள அமெரிக்காவானது ஆயுதங்களை வழங்கி வருகிறது. இச்சூழலில் தைவானை, சீனா கைப்பற்ற நினைத்தால் அமெரிக்கா ராணுவம் அதில் தலையிட்டு தைவானை பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் சமீபத்தில் சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சீனா,தைவானை சீனாவிடம் இருந்து பிரிக்க எந்நாடாவது நினைத்தால் அதை எதிா்த்து போரிடவும் தயங்கப்போவதில்லை என அமெரிக்க நாட்டை எச்சரித்தது.
இதில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையில் இவ்வாறு மோதல் வலுத்துவரும் சூழ்நிலையில், நேற்று ஏவுகணை இடை மறிப்பு சோதனையினை சீனநாடு வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது. பிராந்திய உரிமை கோரல்களுக்கு எதிரான வெளிநாட்டு தலையீட்டை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சீனராணுவம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சீன ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை நடுத்தர ஏவுகணை இடை மறிப்பு சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது முற்றிலும் ஒரு தற்காப்பு நடவடிக்கை எனவும் மாறாக எந்த வெளிநாட்டு நாடுகளையும் குறிவைக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.