Categories
உலக செய்திகள்

தைவானை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்…. பிரபல நாட்டின் விருப்பம்…. அமெரிக்கா கருத்து….!!!!!

உக்ரைன் போர் காரணமாக தைவானை ஆக்கிரமிக்க விரும்பும் சீனாவின் முடிவு ஆலோசனைக்கு உட்படுத்தப்படுகிறது.

தைவானை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என சீனா விருப்பப்படுகிறது. ஆனால் உக்ரைன்  போரின்  படிப்பினைகளை தெரிந்தால் சீனா இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளும் என அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக இருக்கும் பில் பார்ன்ஸ் தெரிவித்துள்ளார். இவர் நேற்று அளித்துள்ள பேட்டியில் கூறிய போது, தைவான் பகுதியைச் சீனாவின் ஒரு மாகாணமாக சீன அரசு பார்த்து வருகிறது. அதே நேரத்தில் தைவானை சீனாவுடன் இணைக்கும் தனது இலக்கை சீன அதிபர் ஜி ஜின்பிங் பலவந்தமாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என்று நான் நம்பவில்லை.

மேலும் கட்டுப்பாட்டை பெற எப்படி, எப்போது முயற்சி செய்வது என்பது பற்றி சீனாவின் கணக்கீட்டை உக்ரைனில் ஏற்பட்ட ரஷ்யாவின் அனுபவம் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை சுமத்துவதற்கு அட்லாண்டிக் நாடுகள் கூட்டமைப்பு ஒன்றிணைந்த விதத்தில் அவர்கள் ஒரு விதத்தில் தாக்கப்படுகின்றனர். மேலும் புதின் செய்த  செயல்கள் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் மேலும் நெருக்கமாக வழி வகுக்கின்றது. இந்த உண்மையை உணர்ந்து கொண்டதால் சீனா அமைதியற்ற நிலையில் இருக்கின்றது.

மேலும் சீன தலைமை இதையெல்லாம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது.தைவான் மீது சீனா கட்டுப்பாட்டை பெறுவதற்காக தனது எந்த ஒரு முயற்சியையும் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய செலவுகள் மற்றும் பின்விளைவுகளைப் பற்றி சீன தலைமை கவனித்து வருகின்றது. ரஷ்ய இராணுவ படைகளின் மோசமான செயல்திறன் மற்றும்  உக்ரைனிய  சமூகத்தில் இருந்து வரும் கடுமையான எதிர்ப்புகளையும் பார்த்து சீனா ஆச்சரியப்பட்டு இருக்கிறது.

மேலும் படைகளை இன்னும் இரண்டு மடங்காக்கினால் உக்ரைனில்  முன்னேற முடியும் என்பதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் இப்போது உறுதியாக உள்ளார் என நினைக்கிறேன். இந்நிலையில்  போரில் ஏற்பட்ட எதிர்ப்பால் புதின் பின்வாங்கவில்லை. அவர் ஒரே மனநிலையில் தான் இருக்கின்றார் என அமெரிக்க உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |