Categories
மாநில செய்திகள்

தேர்வர்களே ரெடியா இருங்க!…. இன்று மதியம் 12.30க்கு TNPSC தேர்வு தேதி அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், அரசு பணிகளின் அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை. இந்த நிலையில் தொற்று பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் அரசு தேர்வுகளை நடத்த முடிவெடுத்து குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று டிஎன்பிஎஸ்சி தலைவர் 5,831 காலி பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் எப்போது நடைபெறும் ? என்பது குறித்த முழு விவரங்களையும் இன்று ( பிப்.18 ) பிற்பகல் 12 மணிக்கு அறிவிக்க உள்ளார். தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை கடந்த டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் இது குறித்த பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்மொழித் தகுதி தாள் தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |