தேர்தல் விடுமுறையை முன்னிட்டு மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு 4-ஆம் தேதியில் இருந்து ஆறாம் தேதி வரை மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தது. மது பிரியர்கள் மதுக்கடைகள் மூடப்படுவதை அறிந்து அதற்கு முன்னதாகவே தங்களுக்கு பிடித்தமான மதுரகங்களை வாங்கி சென்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவு பெற்றதையடுத்து நேற்று முன்தினம் மதுக்கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டது. இதனால் மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. சிங்கம்புணரியில் நேற்று முன்தினம் மஞ்சுவிரட்டு விழாவை பார்க்க வந்த மது பிரியர்கள் மகிழ்ச்சியுடன் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதை பார்க்க முடிந்தது.