தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் பகுதியில் கள் இறக்க அனுமதி வழங்க கோரி 150 குடும்பங்கள் தேர்தலை புறக்கணிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேம்பி ஊராட்சி பூரி குடிசை கிராமத்தில் கள் இறக்கும் தொழில் செய்வோர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்வதாக குற்றம் சாட்டி தேர்தலை அம்மக்கள் புறக்கணித்துள்ளனர்.