Categories
மாநில செய்திகள்

தேர்தலுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் வருகின்ற 19-ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து வருகின்ற 22-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி முதல் 23-ம் தேதி வரை 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் பள்ளிகளில் அமைக்கப்படுகின்றன. எனவே தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 5 நாட்கள் அல்லது 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட உள்ளது உறுதியாகியுள்ளது. அதேபோல் தேர்தலுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் 23-ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |