Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேர்தலில் தோற்ற மனைவி…. கணவன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

வேட்பாளரின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் சுகுணா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளரிடம் 350 வாக்குகள் வித்தியாசத்தில் சுகுணா தேவி தோல்வியடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவரது கணவர் நாகராஜன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த நாகராஜனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நாகராஜனை  பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |