Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

ஹோட்டல் தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் ரயில்வே லைன் தெருவில் சிக்கந்தர்கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பேகம் என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்ற சிக்கந்தர்கனி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.

இதனால் சிக்கந்தர்கனியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்நிலையில் நேற்று குண்டாறு பாலத்திற்கு கீழே இருக்கும் காளியம்மன் கோவில் அருகே சிக்கந்தர்கனி சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது சிக்கந்தர்கனியின் தலையில் மர்ம நபர்கள் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் அவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிக்கந்தர் கனியை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |