Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் BJP வேட்பாளரின் உறவினர்கள் வீடுகளில் சோதனை …!!

தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரின் உறவினர் வீடுகளில் போலீசார் கைப்பற்றிய பணத்தை அக்கட்சி தொண்டர்கள் பறித்துக் கொண்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் தப்பாக்ஸ் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ரகுநந்தன்ராவ் உறவினர் வீடுகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 8 இடங்களில் நடைபெற்ற சோதனையில் சுமார் 19 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனை நடப்பதை அறிந்து அங்கு வந்த பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் போலீசாரிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

போலீஸ் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. நிகழ்வு இடத்திற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பத்திசஞ்சய்யை போலீசார் கைது செய்தனர். வேட்பாளர் உறவினர் வீடுகளில் கைப்பற்றிய பணத்தை பாஜக தொண்டர்கள் பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |