தெலுங்கானா பாஜக தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதனை காவல்துறையினர் உறுதி செய்தனர். நேற்று வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையே அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞானேந்திர பிரசாத் அவரது வீட்டில் இறந்து கிடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த பிரசாந்த் உடலை மீட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தொடர்பான தகவல் இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.