Categories
மாநில செய்திகள்

தெற்கு ரயில்வேயின் புதிய அறிவிப்பு…. ரயில் சேவையில் மாற்றம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது.அதுமட்டுமல்லாமல் தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்நிலையில் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ள காரணத்தால் பல்வேறு இடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி ரயில் 07237, 07238 சென்னை சென்ட்ரல்-பித்ர குண்டா சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்-ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரயில்கள், அரக்கோணம்-ரேணிகுண்டா-கூடூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. வண்டி எண் 02433, 02269 ரயில்கள் சென்னை சென்ட்ரல்-ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரயில். ஹவுரா விசயவாடா சிறப்பு ரயில்களும் இதனைப் போலவே திருப்பி விடப்பட்டுள்ளது.

Categories

Tech |