Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில்…. விநாயகர் சிலை கண்டெடுப்பு…. ஆய்வாளர்களின் தகவல்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் மோகன கண்ணன் ஆகியோர் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆய்வாளர்கள் 15 சென்டிமீட்டர் உயரமும், 7 சென்டிமீட்டர் அகலமும் உடைய சூடு மண்ணால் ஆன விநாயகர் சிலையை கண்டெடுத்தனர்.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது, கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையின் தலையில் கரண்ட மகுடமும், இரு காதுகளில் ஓட்டையும், துதிக்கை நீண்டும் காணப்படுகிறது. சிலையின் தோள்களிலும் காப்பு அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை சோழர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.

Categories

Tech |