இன்று கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அந்தவகையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தென்னகத்து போஸ் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில், “கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர். “தென்னகத்து போஸ்” ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.