Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்….! “மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் மாணவிகள்”….. கட்டிடம் விரைந்து கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை….!!!!!!

ஏரல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து பாடம் கற்று வருவதால் வகுப்பறைகளை உடனே கற்றுத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மூன்று கட்டிடங்களில் 17 வகுப்பறைகளுடன் இயங்கி வந்தது. இப்பள்ளியில் 600 மாணவிகள் படித்து வருகின்றார்கள். இந்தப் பள்ளி கட்டிடம் மிகவும் சேதம் அடைந்ததால் இங்கு படித்து வந்த மாணவிகள் தற்காலிகமாக ஏரல் அருகே இருக்கும் சிறுதொண்டநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்கள். மேலும் இப்பள்ளியில் இருந்த இரண்டு கட்டிடங்கள் முழுமையாக இடிக்கப்பட்டது.

தற்போது ஒரு கட்டிடத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் மட்டும் பயின்று வருகின்றார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் சிறுதொண்டநல்லூர் பள்ளிக்கூடத்தில் பயின்று வருகின்றார்கள். சிறுதொண்டநல்லூர் பள்ளியிலும் போதுமான கட்டிட வசதி இல்லாததால் மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நீண்ட தூரம் நடந்து செல்வதால் பாதுகாப்பற்ற நிலையும் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் நோய் தொற்றுக்கும் ஆளாகி வருகின்றார்கள். ஆகையால் ஏரல் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்களை விரைவாக கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Categories

Tech |