சென்னை பட்டினப்பாக்கத்தில் சேர்ந்த தடகள வீராங்கனை (27)தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீராங்கனை சடலமாக கண்டெடுக்கப்பட்ட வீட்டிலிருந்து நீலாங்கரை காவல் நிலைய தலைமைக் காவலர் முகிலன் தப்பி சென்றதாக தகவல் வெளியானது. தப்பி ஓடிய காவலரை விரட்டி பிடித்த போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக அவர் தப்பி ஓடினார், ஏன் வீராங்கனை தற்கொலை செய்து கொண்டார் போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories
தூக்கில் தொங்கிய வீராங்கனை…. திடீரென தப்பி ஓடிய போலீஸ்…. பெரும் பரபரப்பு….!!!!
