நடிகர் துருவ் விக்ரம் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் திரைப்படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே மாறி தன்னை தயார்படுத்திக் கொள்ளும் நடிகர்கள் சிலர் தான் உள்ளனர் . உலகநாயகன் கமல்ஹாசனையடுத்து சீயான் விக்ரம் தான் கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாக மாறும் நடிகர் என்று கூறலாம் . அந்த வகையில் தற்போது சீயான் விக்ரமுக்கு அடுத்ததாக அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரமும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார் . சமூக வலைத்தள பக்கத்தில் துருவ் விக்ரம் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நடிகர் துருவ் விக்ரம் அவரது தந்தை விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் . இந்த படத்தில் துருவ் ஹீரோவாகவும், விக்ரம் வில்லனாகவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது . அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்காக தான் துருவ் விக்ரம் அவரைத் தயார்படுத்தியுள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் . இதையடுத்து அவருக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்துள்ளது .