Categories
உலகசெய்திகள்

துபாயில் கட்டப்பட்ட புதிய இந்து கோவில் நேற்று திறப்பு… அனைத்து மதத்தினிருக்கும் அனுமதி… கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல்…!!!!!

துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டிருக்கின்ற புதிய இந்து கோவில் நேற்று திறக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்திருக்கின்றார்கள். இந்த கோவிலானது ஏற்கனவே அமைந்துள்ள சிந்தி குழு தர்பார் கோவிலின் விரிவாக்கமாகும் சிந்தி குரு தர்பார் கோயில் ஆனது ஐக்கிய மரபு அமீரகத்தில் உள்ள பழமையான இந்து கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில் துபாயின் புதிய கோவிலின் அடித்தளம் பிப்ரவரி 2022 நாட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பின் பணிகள் நிறைவடைந்து இருக்கிறது.

மேலும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக இந்த கோவில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும். இந்த கோவில் அனைத்து மதத்தினரையும் வரவேற்கிறது மற்றும் வழிபாட்டாளர்கள் மற்றும் பிற பார்வையாளர்களுக்கு நுழைவதற்கும் அனுமதி அளித்திருக்கிறது. கோவில் நிர்வாகம் தினசரி அடிப்படையில் சுமார் 1000 முதல் 1200 பக்தர்கள் வழிபாடு செய்து கொள்ளலாம். துபாயின் புதிய இந்து கோவில் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் கூட்ட நெரிசலை தவிப்பதற்காக பார்வையாளர்களுக்கு கோவில் நிர்வாகம் க்யூ ஆர் கோடு குறியீடு அடிப்படையில் பல தேவாலயங்கள் மற்றும் சீக்கிய குருவாரா உள்ள நிலையில் துபாயின் புதிய இந்து கோவில் அமைக்கப்பட்டிருப்பதன் மூலமாக துபாயில் வசிக்கும் இந்து மதத்தினரின் பல வருட கனவு நிறைவேறி இருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |