கோவை மாவட்ட இரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஒருவரின் கை கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்திலுள்ள ரயில்வே நிலையத்தில் மாலை 5.30 மணியளவில் கோவையில் இருந்து அசாம் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் ரயில்கள் நிற்கும் 5வது நடைமேடை தண்டவாளத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஒருவரின் கை கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக இரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இரயில்வே காவல்துறையினர் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த கையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இரயிலில் அடிபட்டு கை துண்டானதா அல்லது கொலை செய்யப்பட்ட நபரின் கை தண்டவாளத்தில் வீசப்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.