ஊத்துக்குளி அருகே துணி காய வைக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்துக்குளி அருகே இருக்கின்ற செங்கப்பள்ளி ஊராட்சியில் பூசாரி பாலம் என்ற பகுதியில் சண்முகம் மற்றும் சரஸ்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சரஸ்வதி தனது வீட்டில் துவைத்த துணிகளை காய வைப்பதற்கு சென்றுள்ளார். அப்போது துணி காயவைக்கும் கம்பியில் துணியை போட்டபோது கம்பியில் இருந்து திடீரென மின்சாரம் அவரை தாக்கியுள்ளது.
உடனடியாக தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரஸ்வதி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.