மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பையில் சங்கர சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மாரிச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று காலை மாரிச்செல்வி வீட்டு மாடியில் துணிகளை காய போட்டுள்ளார். அப்போது தலை சுற்றியதால் எதிர்பாராதவிதமாக மாரிச்செல்வி மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாரிச்செல்வி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.