Categories
சேலம் மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்ற பெற்றோர்…. மகனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அத்தனூர்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்திய பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆதிஷ், சூரியகுமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ஆதிஷ் வாழப்பாடியில் இருக்கும் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் வீட்டில் இருந்தவர்கள் அருகே உள்ள துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்போது ஆதிஷ் சுவிட்ச் பெட்டியில் கை வைத்துள்ளான்.

இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். திரும்பி வந்த பெற்றோர் தங்களது மகன் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |