Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 17 லாரிகள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!!

போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே சித்திரங்கோடு பகுதியில் இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையிலான காவலர்கள் தீவிர வாகன பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் எம் சாண்ட் மணல் இருப்பது தெரியவந்தது.

அந்த லாரியில் அளவுக்கு அதிகமாக எம் சாண்ட் மணல் இருந்துள்ளது. இதனால் அந்த லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதேப்போன்று போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 17 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |