சாராயம் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் கடற்கரை சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காவல்துறையினரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களை விரட்டி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் அவர்கள் இருவரும் கீழ்வேளூரை சேர்ந்த வீரமுருகன் மற்றும் மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.