Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் ஒரு மளிகை கடையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக கடை உரிமையாளரான பிரபாகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 40 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |