திடீரென குழியில் இருந்து கருப்பு நிற திரவியம் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஊழியர்கள் எந்திரன் மூலம் குழியை தோண்டினர். அப்போது திடீரென கருப்பு நிறத்தில் திரவம் வெளியேறியுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனடியாக மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் என்பருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர் அந்த திரவம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது பூமிக்கு அடியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் இந்தியா ஆயுள் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கசிவை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.