அரக்கோணத்தில் பெண் ஒருவர் உடல்நிலை பாதிப்பால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள வெங்கடேசபுரம் டிரான்ஸ்பார்மர் தெருவில் மகபூப் பாஷா இவரது மனைவி 40 வயதுடைய ரசியா பேகம் ஆகியோர் வசித்து வந்தனர். இவர் மனைவி கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிப்பால், பாதிக்கப்பட்டு இருந்தார். இவரின் உடல் நிலையானது ,நேற்று காலை நேரத்தில் மிகவும் மோசமானது . இந்த நிலையில் அதனைத் தாங்க முடியாமல், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதைக் கண்ட குடும்பத்தினர் ,அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு ,பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அரக்கோணம் டவுன் பகுதியை சேர்ந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.