Categories
சென்னை மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. சென்னை மக்களுக்கு மாநகராட்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக காலை 6 மணி முதல் 7மணி வரையும் இரவு 7 மணி முதல் எட்டு மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு விதிக்க வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி பட்டாசு குப்பைகளை அப்புறப்படுத்துவது குறித்து முக்கிய அறிவிப்பு இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எரிந்த நிலையிலும் எரியாத நிலையிலும் உள்ள பட்டாசுகள்,பட்டாசு குப்பைகள் மற்றும் எஞ்சிய பட்டாசுகளை பிற குப்பைகளுடன் சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.இத்தகைய பட்டாசு கழிவுகளில் நாள்தோறும் குப்பையில் பெற வரும் தூய்மை பணியாளர்களிடம் தனியாக ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |