Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை…. ஈரோடு மாவட்டத்தில் ரூ.8.55 கோடிக்கு மது விற்பனை….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 8 கோடியே 55 இலட்சம் ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளது என்று  மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 212 மது கடைகளில், 100 மதுக்கடைகள் பார் வசதியுடன் உள்ளது. இந்த மதுக்கடைகளில் பொதுவான நாட்களில் 4 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும். ஆனால் பண்டிகை காலங்களில் கூடுதலாக விற்பனை நடைபெறும்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று விற்பனை களைகட்டியது. குடிமகன்கள் பிராந்தி பீர் ஒயின் போன்ற வகைகளை வாங்கிச் சென்றனர். தீபாவளி அன்று மட்டும் 8 கோடியே 55 லட்சத்துக்கு மது விற்பனையாகியுள்ளதாகவும், சாதாரண நாட்களை விட 2 மடங்கு அதிகமாக மது விற்பனை நடந்துள்ளதாகவும், மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |