Categories
மாநில செய்திகள்

“தீபாவளி பண்டிகை”…. ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம்…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!!

பேருந்துகளில்  அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் வெளியூர்களை சேர்ந்த லட்சக்கணக்கான  தங்கி  வேலையை பார்த்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும்  பண்டிகைகளை  முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும்  அடுத்த மாதம் 24-ஆம் தேதி  தீபாவளி பண்டிகை வருகிறது . இதனால் மக்கள்  தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல  பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.

இதனால் ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு 3 ஆயிரம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு முதல் மூன்று மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |